பிரித்தானியாவை புலம்பெயர்ந்தோர் அடைய.,வேறொன்றை கையிலெடுத்த ஆட்கடத்தல்காரர்கள்
Migrant smugglers using mega dinghies to reach uk: ஆங்கிலக் கால்வாயைக் கடந்து புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்ல, மெகா-டிங்கி படகுகளை, ஆட்கடத்தல்காரர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
ஆங்கிலக் கால்வாயைக் கடந்து புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவை அடைய, ஆட்கடத்தல்காரர்கள் மெகா-டிங்கி படகுகளை பயன்படுத்துகின்றனர் என புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஒரே இரவில் 230 புலம்பெயர்ந்தோருடன்
கடந்த மாதம், 230 புலம்பெயர்ந்தோருடன் நிரம்பிய, ஒரு பிரம்மாண்டமான காற்றடைக்கப்பட்ட படகு ஒரே இரவில் பிரித்தானியாவிற்கு வந்தடைந்தது.
ஒரே சிறிய படகில் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிகப்பெரிய எண்ணிக்கையிலான புலம்பெயர் மக்கள்தொகை இதுதான்.
இது ஒரு போயிங் 737 விமானத்தின் வழக்கமான கொள்ளளவை விட அதிகம் ஆகும். இதற்கு முன்பு 165 பேர் கொண்ட படகு 17 நாட்களுக்கு முன்பு வந்ததே அதிகபட்சமாக இருந்தது.
இந்த நிலையில் மாபெரும் படகுகளின் திடீர் வருகைக்குப் பின்னால் உள்ள மற்றொரு காரணத்தை விசாரணை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. அதாவது, கடத்தல்காரர்களிடம் சிறிய படகுகள் தீர்ந்து வருவதால், அவர்கள் மெகா-டிங்கி படகுகளை தொடங்கியுள்ளனர்.

புதிய கவலைகள்
குறைவான படகுகளே கிடைப்பதால், முன்பு தனித்தனியாக செயல்பட்டு வந்த போட்டி குற்றக் குழுக்கள், இப்போது ஒன்றாக செயல்பட நிர்பந்திக்கப்படுகின்றன.
இதன் விளைவாக, பெரிய படகுகளில் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரை அவர்கள் திணிக்கின்றனர். இத்தகைய பெரிய படகுகள் மேலும் பல தயாராகி வருவதாகக் குற்றக்கும்பல் உறுப்பினர்கள் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கடத்தல்காரர்களின் இந்த முன்னெடுப்பு, ஆங்கிலக் கால்வாயின் இருபுறமும் உள்ள அவசரக்கால மீட்புக் குழுக்களிடையே மனித உயிருக்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்த புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.
இதற்கிடையில், பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக செல்வதற்கு ஆட்கடத்தல்காரர்கள் ஒரு நபருக்கு சுமார் 2,000 பவுண்டுகள் வரை கட்டணம் வசூலிப்பதாகக் கருதப்படுகிறது.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |