பிரித்தானியாவில் சட்டவிரோதமாக வேலை செய்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வெளியேற்றம்

United Kingdom Migrant Workers
By Balamanuvelan Oct 29, 2025 12:35 PM GMT
Report

 பிரித்தானியாவில் சட்டவிரோதமாக வேலை செய்துவந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக வேலை செய்துவந்த புலம்பெயர்ந்தோர்

புகலிடம் கோரி பிரித்தானியாவுக்கு வந்து, அரசின் உதவி பெற்று, அரசு அனுமதிக்கும் ஹொட்டல்களில் தங்கியிருப்போர், Deliveroo, Just East மற்றும் Uber Eats போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் வேலை செய்துவருவது சில மாதங்களுக்கு முன் தெரியவந்தது. 

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக வேலை செய்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வெளியேற்றம் | Migrants Kick Out Uk After Illegal Work Found

அதைத் தொடர்ந்து, புகலிடக்கோரிக்கையாளர்கள் உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்யவிடாமல் தடுக்க உள்துறை அலுவலகம் கடும் நடவடிக்கைகளைத் துவக்கியது.

ரெய்டுகள் நடத்தி, உணவு டெலிவரி செய்யும் புகலிடக்கோரிக்கையாளர்களை மடக்கிப் பிடிக்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டன.

மேலும், புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கியிருக்கும் இடங்களின் முகவரிகளை உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்குக் கொடுத்து, அந்த முகவரியில் வாழ்வோருக்கு வேலை கொடுக்ககூடாது என அறிவுறுத்தப்பட்டது. 

பிரித்தானிய இளவரசியிடம் உயரிய விருது பெற்ற ஜாம்பவான்

பிரித்தானிய இளவரசியிடம் உயரிய விருது பெற்ற ஜாம்பவான்

அத்துடன், சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு உதவும் நிறுவனங்களுக்கு 60,000 பவுண்டுகள் அபராதம் முதல் சிறைத்தண்டனை வரை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வெளியேற்றம்

இந்நிலையில், பிரித்தானியாவில் சட்டவிரோதமாக வேலை செய்துவந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார். 

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக வேலை செய்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வெளியேற்றம் | Migrants Kick Out Uk After Illegal Work Found

அவ்வகையில், 1050க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், இந்த ஆண்டு, அதாவது, 2025 செப்டம்பர் வரை, புலம்பெயர்தல் அதிகாரிகள் 11,000 ரெய்டுகள் நடத்தியுள்ளதாகவும், அதில், 8,000 புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. 

சர்ச்சையில் சிக்கிய இளவரசரின் பிள்ளைகளை மிரட்டினாரா வில்லியம்? அரண்மனை விளக்கம்

சர்ச்சையில் சிக்கிய இளவரசரின் பிள்ளைகளை மிரட்டினாரா வில்லியம்? அரண்மனை விளக்கம்

எப்படியாவது பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிட்டால் போதும், ஏதாவது ஒரு வேலையைச் செய்து பிழைத்துகொள்ளலாம் என்னும் எண்ணத்தில்தான் பலர் பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைகிறார்கள்.

இனி அது நடக்காது என்று கூறியுள்ள உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், பிரித்தானியாவின் எல்லைகளைப் பாதுகாக்க, என்னாலியன்ற அனைத்தையும் செய்வேன் எனகூறியிருந்தார்.

அவர் கூறியதுபோலவே, பிரித்தானியாவில், உணவகங்கள், உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள், சலூன்கள் மற்றும் கார் வாஷ் செய்யும் இடங்களில் சட்டவிரோதமாக வேலை செய்துவந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US