புகலிடக் கோரிக்கையாளர்கள் விவகாரம்... ஆட்சியை பறிகொடுத்த ஐரோப்பிய நாட்டின் பிரதமர்
நெதர்லாந்தில் புகலிடக் கொள்கைகள் தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து ஆட்சியை பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் பிரதமர் மார்க் ரூட்டே.
ஒருமித்த கருத்தை எட்டவில்லை
வெள்ளிக்கிழமை பிரதமர் ரூட்டே தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அவசர ஆலோசனைக் கூட்டத்தில் நான்கு கூட்டணி கட்சிகளும் ஒருமித்த கருத்தை எட்டவில்லை என்றே கூறப்படுகிறது.
@EPA
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சிக்கு வந்த பிரதமர் ரூட்டே தலைமையிலான அரசாங்கம், புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கூட்டணி கட்சியினரால் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வந்தது.
தற்போது பிரதமர் ரூட்டேவால் ஆட்சியை தக்கவைக்க முடியாத நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் தேர்தல் முன்னெடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். ஆட்சி கவிழ்ந்துள்ளதை உறுதி செய்த பிரதமர் ரூட்டே, தனது ராஜினாமா கடிதத்தை மன்னர் வில்லெம்-அலெக்சாண்டரிடம் சனிக்கிழமை ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நான்கு கூட்டணி கட்சிகளும்
நெதர்லாந்தில் புகலிடம் கோரும் விண்ணப்பங்கள் இந்த ஆண்டு மட்டும் 70,000 தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதத்திற்கு 200 பேர் என்ற அளவில் நெதர்லாந்திற்குள் அனுமதிக்கப்படும் போர் அகதிகளின் உறவினர்களின் எண்ணிக்கை உள்ளடக்கிய ஒரு திட்டத்தை இந்த வாரம் அமுலுக்கு கொண்டுவர பிரதமர் ரூட்டே முயன்றுள்ளார்.
@EPA
ஆனால், இந்த திட்டத்திற்கு நான்கு கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், நான்கு கட்சிகளும் புலம்பெயர் மக்கள் தொடர்பான உடன்பாட்டை எட்ட முடியாத நிலையில் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்ததாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2010ல் இருந்தே பிரதமராக ஆட்சியில் இருந்து வரும் 56 வயதான ரூட்டே, 2022 ஜனவரி மாதத்தில் தான் நான்கு கூட்டணி கட்சிகளுடன் புதிதாக ஆட்சிக்கு வந்தார். இது இவரது நான்காவது கூட்டணி ஆட்சியாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |