மொத்தமாக மூழ்கடித்த பேய் மழையை அடுத்து... ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலநடுக்கம்
ஓராண்டுக்கு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்த நிலையில், ஐக்கிய அமீரகத்தின் துபாய் உட்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.
2.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
மழை ஓய்ந்த பின்னரும் பல பகுதிகள் தற்போதும் வெள்ளத்தில் மூழ்கியே உள்ளது. இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் 2.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியிருப்பாளர்கள் பலர் நில அதிர்வை உணர்ந்துள்ளதாகவும் கூறுகின்றனர். உள்லூர் நேரப்படி 3.03 மணிக்கு கோர் ஃபக்கான் கடற்கரையில், 5 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், தேசிய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடிமக்கள் நில அதிர்வுகளை உணர்ந்திருந்தாலும், நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்றும், இது லேசான நிலநடுக்கம் மட்டுமே என்றும், பொதுவாக இதுபோன்ற நிலநடுக்கங்கள் மக்களால் உணரப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |