காபூல் விமான நிலையத்தில் இராணுவ வீரர்கள் வெறிச்செயல்.. பெண்கள் குழந்தைகள் என பாராமல் சரமாரி துப்பாக்கிச் சூடு! வெளியான பரபரப்பு காட்சி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் வெளியே கூடிய மக்கள் மீது இராணுவ வீரர்கள் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலிபான்கள் காபூலை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஆகஸ்ட் 15 (ஞாயிற்றுக்கிழமை) முதல் காபூல் விமான நிலையத்தில் நீடித்து வரும் பதட்டமான சூழ்நிலையில் இதுவரை சுமார் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
எனினும், நூற்றுக்கணக்கான மக்கள் காபூலில் உள்ள Hamid Karzai சர்வதேச விமான நிலையம் வழியாக ஆப்கானை விட்டு வெளியேற தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
இதனிடையே காபூல் விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் இன்னும் கூட்டமாக இருக்கும் மக்களில், பயணிக்க சட்டப்பூர்வ உரிமை இல்லாதவர்கள் வீட்டிற்கு செல்லுமாறு தலிபான்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதேசமயம், தங்கள் நாட்டு மக்களை ஆப்கானிலிருந்து வெளியேற்ற காபூல் விமான நிலையத்தை அமெரிக்க தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
இந்நிலையில், காபூல் விமான நிலையத்தின் ஒரு நுழைவாயில் அருகே கூடிய மக்களை, இராணுவ உடை அணிந்த ஆயுதமேந்திய நபர்கள், பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என பாராமல் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்த பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது.
Disturbing Scene; this happens almost few times a day in different sides of the Kabul Airport.#kabulairport #Afghanistan#AfghanWomen pic.twitter.com/lGfRzPPvS3
— Aisha Ahmad (@AishaTaIks) August 19, 2021
துப்பாக்கியால் சுட்ட இராணுவ வீரர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.
அதேசமயம், விமான நிலையத்தின் மற்றொரு நுழைவு வாயில் அருகே கூடிய மக்களை, தலிபான்கள் குச்சியால் அடித்து விரட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
#Taliban side is more calm.#kabulairport #Afghanistan#AfghanWomen pic.twitter.com/5sJ69CQtNp
— Aisha Ahmad (@AishaTaIks) August 19, 2021