நைஜர் நாட்டு அதிபர் கைது... இராணுவத்தின் ஆட்சியாக மாறிய நாடு!
நைஜர் நாட்டின் ஆட்சியை அந்நாட்டின் இராணுவம் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்தி
ஜனாதிபதி மொஹமட் பாஸூம்(Mohamed Bazoum) இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து நைஜரின் எல்லைகள் மூடப்பட்டு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு கலைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து நிறுவனங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நைஜர் இராணுவம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் மக்கள் ஜனாதிபதி மொஹமட் பாஸூமிற்கு ஆதரவாக வீதிகளுக்கு இறங்கியுள்ளார்கள்.
#BREAKING #Africa #Niger #NigerCoup JUST IN: Niger soldiers on national TV: Coup in Niger succeeded, president Bazoum removed from power, border closed. pic.twitter.com/o8hmK1uRdh
— National Independent (@NationalIndNews) July 26, 2023
ஆகவே அங்கிருந்த அனைத்து வீரர்களும் எதிர்ப்பை சமாளிக்க துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
மேலும் ஆப்பிரிக்க ஒன்றியம், ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |