500ML பால் போதும்...! 10 நிமிடத்தில் அல்வா செய்திடலாம் தெரியுமா?
இனிப்பு என்பதை பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? இனிப்பு பண்டம் என்றாலே அனைவரிற்கும் ஞாபகத்திற்கு வருவது அல்வா.
அல்வா என்றாலே நாவில் எச்சில் ஊறும். அதற்கு இன்று வரையில் ஒரு மவுசு இருக்க தான் செய்கிறது. அல்வா என்ற பெயர் கேட்டால் உடனே பலருக்கும் ஞாபகத்திற்கு வருவது, இருட்டுக் கடை அல்வா, திருநெல்வேலி அல்வா தான்.
ஆனால் இன்று நீங்கள் வித்தியாசமான சுவையில் பால் அல்வா பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
பால் அல்வா பொதுவாக பண்டிகைகளுக்காக தயாரிக்கப்படும் இனிப்பு வகையாகும். இது பால் வைத்து கெட்டியாக தயாரிக்கப்படுவதாகும். எப்படி இலகுவாக செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 500 மில்லி மாட்டுப்பால்
-
300 கிராம் நெய்
- 500 கிராம் சீனா கற்கண்டு
-
ஒரு டேபிள்ஸ்பூன் குங்குமப்பூ
-
பாதாம், பிஸ்தா, முந்திரி தேவையான அளவு
செய்முறை
-
முதலில் ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி, பாலாடை விழாதப்படி காய்ச்சி எடுக்க வேண்டும்.
- பால் சுண்டி திரண்டு வரும் வேளையில், நெய் விட்டு நன்கு கிளற வேண்டும்.
- இந்நேரத்தில் வேறு ஒரு பாத்திரத்தில் கற்கண்டு மற்றும் தண்ணீர் சேர்த்து பாகாக காய்ச்சி எடுக்கவும்.
- இதை காய்ச்சிக் கொண்டிருக்கும் பாலில் சேர்க்கவும்.
- கிளறி கெட்டியானவுடன் குங்குமப்பூவை பன்னீரில் அரைத்து சேர்த்துக் கொள்ளுங்கள்.
-
இறுதியாக நெய்யில் வறுத்து எடுத்த முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்பை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
- இந்த முறைப்படி செய்து எடுத்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான பால் அல்வா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |