பல கோடிகளுக்கு அதிபரான திருடன்! அடுத்த சில ஆண்டுகளில் பணத்தையே வெறுத்து அது ஒரு சாபக்கேடு என புலம்பல்.. காரணம் இதுதான்
பிரித்தானியாவில் அதிகளவு பணத்துடன் பெரும் கோடீஸ்வரராக இருந்த நபர் பணம் ஒரு சாபக்கேடு என விரக்தியுடன் கூறியுள்ளார்.
லீ ரயன் என்ற நபருக்கு கடந்த 1995ஆம் ஆண்டு லொட்டரியில் £6.5 மில்லியன் பரிசு விழுந்தது. ஆனால் அனைத்து பணத்தையும் இழந்து நடுரோட்டுக்கு வந்த ரயன் பணம் என்ற வார்த்தையை கேட்டாலே அலர்ஜி என்கிறார்.
தற்போது 60களில் உள்ள ரயன் ஒரு காலத்தில் திருடனாக இருந்தார், கடந்த 1980கள் இறுதியில் கார்களை திருடிவிட்டு சிறையில் இருந்த போது கடவுளிடம் நான் கோடீஸ்வரன் ஆக வேண்டும் என வேண்டியிருக்கிறார் ரயன்.
அடுத்த சில ஆண்டுகளில், அதாவது 1995ல் அவருக்கு லொட்டரியில் £6.5 மில்லியன் பரிசு விழுந்தது. இதன்பின்னர் தான் அவருக்கு வாழ்வில் பல பிரச்சினைகள் வந்தது.
அப்போது பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்திருந்த ரயன் பல சொகுசு கார்களை வாங்கியதோடு, வீடு, சொகுசு வாழ்க்கை என ஆடம்பரமாக இருந்தார். ஆனால் மீண்டும் திருட்டு கார்களை பயன்படுத்தியதாக அவர் கைது செய்யப்பட்டார்.
சிறையில் இருந்து வெளியே வந்து தொழில்கள் செய்தார், அனைத்தும் பெரும் நஷ்டம் அடைந்த நிலையில் அவரின் கார்கள், வீடுகள் எல்லாம் பறிபோனதோடு மனைவியும் அவரை பிரிந்தார்.
இதன்பின்னர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் ரயன், மீதமிருந்த பணத்தை வைத்து மீண்டும் தொழில் தொடங்க அதுவும் நஷ்டமானது. இந்த நிலையில் அனைத்தையும் இழந்து நடுரோட்டுக்கே வந்துவிட்டார், கடந்த 2010ல் இரண்டாவது மனைவியையும் பிரிந்தார். தற்போது சாதாரண வேலையில் சிறிய வீட்டில் லண்டனில் வசித்து வருகிறார் ரயன்.
அவர் கூறுகையில், பணம் என்றாலே சாபம் தான், நான் கோடீஸ்வரனாக இருந்ததை விட இப்போது தான் மகிழ்ச்சியாக உள்ளேன். இந்த பணத்தால் தான் சாலையில் படுக்கும் நிலைக்கு வந்தேன், இப்போது என் வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லை என கூறியுள்ளார்.