ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார்.
ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை
கடந்த திமுக அரசு, குடும்பத்தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகையாக ரூ.1000 வங்கிக்கணக்கில் செலுத்தி வந்தது.
தவெக தேர்தல் அறிக்கையில், மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்கப்படும் என அறிவித்தது.

தற்போது தவெக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், மகளிர் உரிமைத்தொகை முதல் கையெழுத்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட 3 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை மறு சீரமைப்பு செய்ய உரிய கால அவகாசம் தேவை என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
இதனால், கடந்த திமுக அரசு வழங்கி வந்த ரூ.1,000 நிறுத்தப்படுமா என மக்கள் கலக்கத்தில் இருந்த நிலையில், மே மாதத்திற்கான உரிமைத்தொகை ரூ.1000 நேற்று வரவு வைக்கப்பட்டது.

தவெக அறிவித்த ரூ.2,500 எப்போது வழங்கப்படும் என மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இது குறித்து அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், நிதி நிலைமைகளை ஆராய்ந்து, நிதி ஆதாரங்களை சரிசெய்து, பட்ஜெட்டிற்கு பின்னரே அறிவிக்கப்படும். இதன் GO மூலமாக அறிவிக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |