நடுக்கடலில் விழுந்த ஹெலிகாப்டர்! 12 மணி நேரம் நீந்தி வந்த அமைச்சரின் தற்போதைய நிலை என்ன?
மடகாஸ்கர் தீவு அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணித்த அந்நாட்டு அமைச்சர் சுமார் 12 மணி நேரம் நீச்சல் அடித்து கரையை அடைந்த நிகழ்வு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தின் தீவு நாடான Madagascar வடகிழக்கு கடற்கரை அருகே 130 பயணிகளுடன் பயணித்த கப்பல் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 39 பேர் உயிரிழந்தனர் மற்றும் 68 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
சரக்குகளை ஏற்றி செல்ல வேண்டிய அந்த கப்பலில் சட்டவிரோதமாக மக்களை ஏற்றி சென்றதாக கூறப்படுகின்றது. இதனால் அதிக பாரம் தாங்காததால் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனிடையே கடலில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் மடகாஸ்கர் மீட்புப்படை இரவும் பகலுமாக தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அந்தவகையில் புறப்பட்ட ஹெலிகாப்டரில் ஒன்றில் அந்நாட்டு அமைச்சர் Serge Gelle என்பவரும் இருந்துள்ளார். இந்நிலையில் புறப்பட்ட ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது.
இதையடுத்து கடலில் குதித்த Gelle சுமார் 12 மணி நேரம் கடலில் நீந்தி அருகில் உள்ள மஹாம்போ என்னும் தீவை அடைந்து உயிர் பிழைத்தார். இவர் கரை அடைந்த பிறகு பேசிய வீடியோ ஒன்றை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
♦️Le GDI Serge GELLE, un des passagers de l'hélicoptère accidenté hier a été retrouvé sain et sauf ce matin du côté de Mahambo.
— Ministère de la Défense Nationale Madagascar (@MDN_Madagascar) December 21, 2021
☑️ Les sapeurs sauveteurs de la #4°UPC ont également retrouvé le carcasse de l'hélicoptère au fond de la mer. pic.twitter.com/sP2abwTMwB
ஹெலிகாப்டரில் பயணித்த மற்றொரு அதிகாரியும் உயிர் பிழைத்தார். அதேவேளையில் ஹெலிகாப்டரின் கேப்டன் மற்றும் அதிகாரி ஒருவரின் நிலை குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.