ரஷ்யாவிலிருக்கும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள எச்சரிக்கை...
ரஷ்யாவிலிருக்கும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
எச்சரிக்கை
ஏஜன்சிகள் சில, ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்கள் தேவை என விளம்பரம் செய்து இந்தியர்களை பணிக்கமர்த்துவதாகவும், அவர்கள் உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்துக்கு உதவ வற்புறுத்தப்படுவதாகவும் சமீபத்தில் சில செய்திகள் வெளியாகின.
அப்படி போருக்குச் சென்ற இந்தியர்களில் சிலர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியானதையடுத்து, ஊடகவியலாளர்கள், இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் கேள்விகள் எழுப்பியுள்ளார்கள்.
இந்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை
அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Randhir Jaiswal, ரஷ்யாவிலிருக்கும் இந்தியர்கள் அனைவரும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், போரில் தலையிடவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் சிலர் ரஷ்ய ராணுவத்தில் உதவிப் பணிக்காக சென்றுள்ளது தெரியவந்துள்ளதாகவும், மாஸ்கோவிலிருக்கும் இந்திய தூதரகம், இந்தியர்களை விடுவிப்பது தொடர்பில் ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |