ஏவுகணைத் தாக்குதல்: ஜேர்மனிக்கு ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை
ஒருபக்கம் சில நாடுகள் உக்ரைன் ரஷ்யப் போரில் உக்ரைனுக்கு உதவிவருவதுபோல் தோன்றினாலும், அதிலும் சுயலாபம் உள்ளதோ என தோன்றுகிறது.
நல்ல லாபம் பார்த்த ஜேர்மன் நிறுவனம்
ஜேர்மனியின் மிகப்பெரிய தானியங்கி மற்றும் ஆயுத உற்பத்தி நிறுவனம் Rheinmetall. உக்ரைன் போர் துவங்கிய பிறகு, அந்நிறுவனத்தின் வருவாய் 27 சதவிகிதம் அதிகரித்து, 6.4 பில்லியன் யூரோக்களாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், அந்நிறுவனம், உக்ரைனிலேயே கவச வாகன உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றைத் துவக்க முடிவு செய்துள்ளது. அடுத்த சில வாரங்களிலேயே இந்த பணி துவங்க இருப்பதாக தெரிவித்துள்ள அந்நிறுவனம், ஆண்டொன்றிற்கு 400 கவச வாகனங்களை உற்பத்தி செய்யமுடியும் என்று கூறியுள்ளது.
ரஷ்யா கடுங்கோபம்
ஏற்கனவே ஜேர்மனி உக்ரைனுக்கு கவச வாகனங்களைக் கொடுத்ததற்கே தன் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தது ரஷ்யா.
இந்நிலையில், ஜேர்மன் நிறுவனமான Rheinmetallஇல் அறிவிப்பால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றுள்ள ரஷ்யா, அந்நிறுவனத்தின்மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |