நீர் பூங்காவில் காணாமல் போன 11 வயது சிறுமி...பிரித்தானியாவில் நிகழ்ந்த துயரம்!
பிரித்தானியாவின் விண்ட்ஸருக்கு அருகிலுள்ள நீர் பூங்காவில் காணாமல் போன 11 வயது சிறுமி உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமையன்று வின்ட்ஸருக்கு அருகிலுள்ள (liquid leisure) நீர் பூங்காவில் காணாமல் போன 11 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு மாலை 4 மணிக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சுமார் 1 மணி நேரம் கழித்து சிறுமி கண்டெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார், ஆனால் அவள் உயிர் பிழைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் இறப்பு குறித்து சரியான காரணம் இதுவரை தெளிவாக தெரியவராத நிலையில், அதுகுறித்த விசாரணையை பொலிஸார் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கண்காணிப்பாளர் மைக்கேல் கிரீன்வுட் தெரிவித்த கருத்தில், சிறுமி தண்ணீரில் மூழ்கி சீரமப்பட்ட சிறிது நேரத்திலேயே பல பொதுமக்கள் சிறுமியை காப்பாற்ற ஏரிக்குள் குதித்தனர்.
இருப்பினும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் அவர்களின் தைரியத்தை நான் பாராட்ட விரும்புகிறேன். உயிரிழந்த சிறுமி தனது நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்தார் என தகவல் தெரியவந்துள்ளது.
சிறுமியை கண்டுப்பிடிக்க காவல்துறை ஹெலிகாப்டர், ஏர் ஆம்புலன்ஸ் மற்றும் படகு தேடுதல் போன்றவற்றை பயன்படுத்தினார்கள்.
கூடுதல் செய்திகளுக்கு: தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் பாலஸ்தீனம்...24க்கும் மேற்பட்டோர் பலி: வீடியோ காட்சிகள்!
சிறுமியின் அடையாளம் இன்னும் நிலுவையில் இருந்தாலும், சிறுமியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.