குவிக்கப்பட்ட பொலிசார்... பச்சிளம் குழந்தையை தேடும் நடவடிக்கை தீவிரம்: கைதான பிரித்தானிய தம்பதி
பிரித்தானியாவில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பச்சிளம் குழந்தையுடன் மாயமான தம்பதி, இறுதியில் பொலிசாரிடம் சிக்கியுள்ள நிலையில், அவர்களின் பச்சிளம் குழந்தை தொடர்பில் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பச்சிளம் குழந்தையுடன் மாயம்
பிரித்தானியாவை சேர்ந்த பணக்கார பிரபுத்துவ குடும்பத்து உறுப்பினரான Constance Marten தமது காதலர் Mark Gordon என்பவருடன் மாயமானார். 2016 முதல் முறையாக சந்தித்துக்கொண்ட இந்த தம்பதி அதன் பின்னர், தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்ந்து வந்தனர்.
@PA
இந்த நிலையில் Constance Marten கருவுற்ற பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்த தம்பதி வாடகை குடியிருப்புகளில் சில வாரங்கள் என மாறி மாறி தங்கி வந்துள்ளனர். மட்டுமின்றி பிரித்தானியா முழுக்க இந்த தம்பதி வாடகை டாக்சியில் பயணித்து வந்துள்ளது.
ஜனவரி 5ம் திகதி இவர்களின் கார் M61 போல்டன் அருகாமையில் கண்டெடுக்கப்பட்டது. அதன் பின்னர் இவர்கள் போல்டனில் இருந்து லிவர்பூல், எசெக்ஸில் ஹார்விச், கிழக்கு லண்டன், பின்னர் சசெக்ஸில் நியூஹவன் என பயணித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த வாரம், இவர்களது பச்சிளம் குழந்தை தொடர்பில் சுகாதாரத்துறை சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. பிறந்து 2 மாதமேயான குழந்தைக்கு உரிய சிகிச்சையும் கவனிப்பும் தேவை எனவும், அதன் உயிரை பறிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டனர்.
@PA
குழந்தையை தேடும் பணி தீவிரம்
ஆனால் தற்போது போல்டன் பகுதியில் வைத்து கான்ஸ்டன்ஸ் மார்டன் மற்றும் அவரது காதலன் மார்க் கார்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் இவர்களின் பச்சிளம் குழந்தை இவர்களுடன் இல்லை என்பதால், அந்த குழந்தையை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஜனவரி தொடக்கத்தில் இவர்களுக்கு பிள்ளை பிறந்த நிலையில், பொலிசாரிடம் சிக்காமலிருக்க இவர்கள் நாடு முழுவதும் பயணப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, கைவசம் இருந்த பணத்தை மட்டும் செலவிட்டுள்ளனர்.
Credit: Facebook
கண்காணிப்பு கெமராவில் முகத்தை மறைத்துள்ளனர்.
இறுதியாக திங்கள்கிழமை இரவு 9.30 மணியளவில் சசெக்ஸ் காவல்துறை அதிகாரிகளால் பிரைட்டனின் ஸ்டான்மர் வில்லாஸில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.