4 வாரங்களுக்கு மேலாக காணாமல் போன பிரித்தானிய சிறுவன்: சடலம் கண்டுபிடிப்பு
பிரித்தானியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போன இளைஞனை தேடும் பணியில், சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலம் கண்டுபிடிப்பு
ஃபால்கிர்க் அருகே உள்ள லாங்க்கிராஃப்ட் கிராமத்தில் மே 7 ஆம் திகதி புதன்கிழமை அன்று, கோல் கூப்பர் (19) கடைசியாக ஒரு பள்ளி நண்பரால் காணப்பட்டார்.
அதன் பிறகு அவர் காணாமல் போனதாக மே 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர்கள், டைவர்ஸ், டிஜிட்டல் வல்லுநர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் எனப் பலரையும் கொண்ட ஒரு பெரிய அளவிலான தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது.
காட்லாந்து காவல்துறை வெள்ளிக்கிழமை பிற்பகல் ஃபால்கிர்க், பாங்க்நாக், கில்சித் சாலைக்கு அருகிலுள்ள ஒரு வனப்பகுதியில் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |