ரூ15,660 கோடிக்கு விலை போன ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பெருந்தொகைக்கு வாங்க மிட்டல் குடும்பம் ஒப்பந்தம் செய்துள்ளது.
ராஜஸ்தான் அணி
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 வெற்றிகளைப் பெற்று, புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

நான்கு தோல்விகளை சந்தித்திருந்தாலும் துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் ராஜஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிட்டல் குடும்பம் மற்றும் அதார் கைவசம் செல்கிறது.
1.65 பில்லியன் டொலர்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 1.65 பில்லியன் டொலர்கள் (ரூ.15,660 கோடி) என்ற பெருந்தொகைக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதியானது.
இதில் மிட்டல் குடும்பம் அணியின் 75 சதவீத பங்குகளையும், அதார் பூனாவாலா 18 சதவீத பங்குகளையும், மீதமுள்ள 7 சதவீத பங்குகளை மனோஜ் படாலே (தற்போதைய உரிமையாளர்) வைத்திருக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |