மு.க ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை செய்வதால் பரபரப்பு
திமுக தலைவர் முக ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் இது குறித்து தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.
மிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், அரசியல் கட்சியினர் மக்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தினர் பறக்கும்படைகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல வருமான வரித்துறையினரும் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை. செந்தாமரை, கணவர் சபரீசனோடு சென்னை நீலாங்கரை இல்லத்தில் வசித்து வருகின்றனர். இன்று அவரது வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.
பாஜக அரசின் உந்துதலால் எவ்வித முகாந்திரமும் இல்லாமல், தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு சோதனை நடைபெறுவதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முக ஸ்டாலின் டுவிட்டரில், மக்களிடம் ஆதரவில்லை; படுதோல்வி உறுதி என்ற நிலையில் வழக்கம் போல பாஜக தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது.
மிரட்டலுக்கு பயந்து அடிமையாய் காலில் விழ நாங்கள் அதிமுக அல்ல!
அச்சமில்லை! துணிந்து எதிர்ப்போம்! உங்கள் தப்புக்கணக்குக்கான தெளிவான பதிலை மக்களே ஏப்.6-இல் வழங்குவர் என பதிவிட்டுள்ளார்.