பாகிஸ்தானில் இலங்கையர் எரித்து கொலை செய்யப்பட்டது ஏன்? முக்கிய குற்றவாளிகள் கைது
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்த காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் Sialkot நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில், முகாமையாளராக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர், இன்று அங்கிருக்கும் தொழிற்சாலை ஊழியர்களால் கடுமையாக தாக்கப்பட்டு, அதன் பின் தீ வைத்து கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்திற்கான காரணம் குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியில், கொலை செய்யப்பட்ட இலங்கையர், அவர்களின் மதத்தலைவரான Muhammad ibn Abdullah-வின் பெயர் கொண்ட சுவரொட்டிகளை இழிவு படுத்தியதால், கடும் கோபமடைந்து, இந்த வன்முறை வெடித்துள்ளதாக Sialkot காவல்துறை தலைவர் Armagan Gondal தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இன்னும் இது நூறு சதவீதம் உறுதிபடுத்தப்படவில்லை, விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 100 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக பொலிசார் கூறியுள்ளனர்.
மேலும், சம்பவம் நடந்த பகுதி தற்போது முழுவதும் பொலிசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதைத் தவிர இதற்கு முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் Farhan Idrees மற்றும் Usman Rasheed ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
The horrific vigilante attack on factory in Sialkot & the burning alive of Sri Lankan manager is a day of shame for Pakistan. I am overseeing the investigations & let there be no mistake all those responsible will be punished with full severity of the law. Arrests are in progress
— Imran Khan (@ImranKhanPTI) December 3, 2021
மேலும், சம்பவம் நடந்த பகுதி தற்போது முழுவதும் பொலிசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த கொடூர செயலலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், நிச்சயமாக சட்டத்தின் முன் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள், இது ஒரு அவமானகரமான நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.