தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களின் தொலைபேசி எண் முடக்கம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு!
பாகிஸ்தானில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களின் தொலைபேசி எண் முடக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று உலகின் பல நாடுகளில் இன்னும் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறது.
இருப்பினும் தடுப்பூசிகளை மட்டுமே பல நாடுகள் மலைபோல் நம்பியுள்ளன. இதனால் தடுப்பூசிகளை உடனடியாக மக்களுக்கு செலுத்த தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
தடுப்பூசி வந்த புதிதில் மக்கள் தயக்கம் காட்டி வந்தனர். ஆனால் தற்பொழுது தொற்றின் ஆபத்தை அறிந்து கொண்ட மக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர்.
இருப்பினும் நாட்டில் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற வகையில் பாகிஸ்தான் அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது தடுப்பூசி செலுத்தாதவர்களின் தொலைபேசி எண்கள் முடக்கப்படும் என்று பாகிஸ்தான் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.