உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கெதிராக போராடிய வெளிநாட்டு அழகிக்கு ஏற்பட்ட துயர முடிவு...
உக்ரைன் போரில் ரஷ்யப் படையினரை துவம்சம் செய்த பிரேசில் நாட்டு அழகி ஒருவர் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த மொடலான Thalita do Valle (39), உலக நாடுகள் பலவற்றில் மனிதநேய உதவிக்குழுக்களுடன் இணைந்து செயல்பட்டவராவார்.
மூன்று வாரங்களுக்கு முன் Thalita உக்ரைன் இராணுவத்தில் ஸ்னைப்பராக இணைந்தார். உக்ரைன் படையினரை நோக்கி முன்னேறும் ரஷ்யப் படையினரை ஒரு ஸ்னைப்பராக தடுத்து நிறுத்தி, போரில் தன் பங்கை செவ்வனே செய்திருக்கிறார் அவர்.
இந்நிலையில், கார்க்கிவ் நகரில் Thalita இருந்த பதுங்கு குழி மீது ரஷ்யப் படையினர் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். முதல் ஏவுகணைத் தாக்குதலில், Thalitaவைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பதுங்கு குழியில் இருந்த Thalitaவின் நிலையை அறிவதற்காக முன்னாள் பிரேசில் இராணுவ வீரரான Douglas Burigo (40) என்பவர் அவரைத் தேடி வந்திருக்கிறார்.
Thalita உயிருடன்தான் இருக்கிறார் என்பதைக் கண்டு அவர் ஆறுதலடைவதற்குள் ரஷ்யப் படையினர் அடுத்த ஏவுகணையை வீசியிருக்கிறார்கள். இரண்டாவது ஏவுகணைத் தாக்குதலில் Thalitaவும் Douglasம் உயிரிழந்துவிட்டார்கள்.
சட்டம் பயின்ற Thalita, மொடலாகவும், நடிகையாகவும் இருந்த நிலையில், பின்னர் ஸ்னைப்பர் பயிற்சி பெற்று ஈராக்கில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.