பெண் பிரதமரை தாக்கிய நபர்! நரேந்திர மோடி கடும் கண்டனம்
டென்மார்க் பிரதமர் மீதான தாக்குதலை நரேந்திர மோடி கண்டித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான பிரதமர்
கடந்த வெள்ளிக்கிழமை மாலை டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சென் (Mette Frederiksen), Copenhagenயில் உள்ள Kultorvetயில் நபர் ஒருவரால் தாக்குதலுக்கு உள்ளானார்.
எனினும் அவருக்கு காயம் ஏற்படவில்லை என்றும், ஆனால் அவர் மன அழுத்தத்திற்கு உள்ளானதாகவும் தகவல் வெளியானது.
மேலும் பிரதமரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் சர்வதேச அளவில் தற்போது கண்டனங்களைப் பெற்றுள்ளது.
மோடி கண்டனம்
இந்த நிலையில் நரேந்திர மோடி தனது கண்டனத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அவரது பதிவில்,
''டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சென் மீதான தாக்குதல் பற்றிய செய்தியால் ஆழ்ந்த கவலை அடைந்தேன். நாங்கள் இந்த தாக்குதலை கண்டிக்கிறோம். நண்பரே நீங்கள் நல்ல ஆரோக்கியம் பெற வாழ்த்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
Deeply concerned by the news of the attack on Mette Frederiksen, Denmark’s Prime Minister. We condemn the attack. Wishing good health to my friend. @Statsmin
— Narendra Modi (@narendramodi) June 8, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |