அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்த நரேந்திர மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்துள்ளார்.
இந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று பிரதமராகியுள்ளார்.
இத்தாலியில் நடந்த ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனை சந்தித்து பேசியுள்ளார் மோடி.
பின்னர் அவர் வெளியிட்ட பதிவில், ''அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனை சந்தித்தேன். உலகளாவிய நலனுக்காக இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய நலனுக்காக இந்தியா - அமெரிக்கா விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.
Met US National Security Advisor @JakeSullivan46. India is committed to further strengthen the India-US Comprehensive Global Strategic Partnership for global good. pic.twitter.com/A3nJHzPjKe
— Narendra Modi (@narendramodi) June 17, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |