எகிப்து ஜனாதிபதியுடன் உரையாடிய இந்திய பிரதமர் மோடி! இஸ்ரேல், ஹமாஸ் போர் குறித்து பேசியது என்ன?
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து எகிப்து ஜனாதிபதியுடன் உரையாடியுள்ளார்.
23வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் நீடித்து வருகிறது. இதுவரை 8,000க்கும் அதிகமான மக்கள் இந்தப் போரில் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், எகிப்து நாட்டின் ஜனாதிபதி அப்தெல் அல்-சிசியுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் போர் குறித்து உரையாடியுள்ளார்.
அவர்களது உரையாடலில் மேற்கு ஆசியாவில் மோசமாகி வரும் பாதுகாப்பு, மனிதத்துவ சூழல் குறித்து பகிரப்பட்டுள்ளன. அத்துடன் பயங்கரவாதம், வன்முறை மற்றும் மக்களின் உயிரிழப்பு தொடர்பான கவலைகள் குறித்து பகிர்ந்து கொண்டதாகவும் மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.
மேலும், விரைவில் அமைதி, நிலையான சூழலை உருவாக்கவும், மனிதத்துவ உதவிகள் செய்ய வேண்டியிருப்பதன் அவசியத்தையும் உடன்பாடு கொண்டிருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
AP
அதேபோல் காஸாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் கருத்துகளை பகிர்ந்துகொண்டதாகவும் எகிப்து செய்தி தொடர்பாளரும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |