அவரது திறமை நாடு முழுவதும் போற்றப்படுகிறது: 14 வயது வீரரை நேரில் சந்தித்தது குறித்து பிரதமர் மோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷியை நேரில் சந்தித்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி
நடப்பு ஐபிஎல் தொடரில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.
தனது முதல் போட்டியின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசிய வைபவ், அடுத்தடுத்த போட்டிகளில் அதிரடி காட்டி மிரட்டினார்.
குறிப்பாக சிக்ஸர் மழைபொழிந்து சதம் அடித்து வியக்க வைத்தார். மொத்தம் 24 சிக்ஸர்களை பறக்கவிட்டு 252 ஓட்டங்களை இந்த தொடரில் குவித்தார்.
நாடு முழுவதும் போற்றப்படுகின்றன
இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்தில் வைபவ் சூர்யவன்ஷியை (Vaibhav Suyavanshi) அவரது குடும்பத்துடன் சந்தித்துள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்களை பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தனது பதிவில்,
"பாட்னா விமான நிலையத்தில், இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தேன். அவரது கிரிக்கெட் திறமைகள் நாடு முழுவதும் போற்றப்படுகின்றன! அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.
At Patna airport, met the young cricketing sensation Vaibhav Suryavanshi and his family. His cricketing skills are being admired all over the nation! My best wishes to him for his future endeavours. pic.twitter.com/pvUrbzdyU6
— Narendra Modi (@narendramodi) May 30, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |