உலகின் அதிபயங்கர திடீர் மாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸ்... அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கண்டுபிடிப்பு
முதலில் கொரோனா வைரஸ் என்றொரு கொலைகார வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது... எங்கோ சீனாவில் ஒரு மூலையில் ஒரு கொள்ளைநோய் என ஒரு செய்தியாக அதை பார்த்தோம்.
ஆனால், அது உலகின் மற்ற நாடுகளுக்குள்ளும் நுழையத் தொடங்கியது. புதிய நாட்டுக்குச் சென்ற மக்கள் அங்கு வாழ்வதை எளிதாக்குவதற்காக அங்குள்ளவர்களின் நடை உடை பாவனைகள், மொழியைக் கற்றுக்கொள்வதுபோல, இந்த கொரோனாவும் திடீர் மாற்றங்களை உருவாக்கத் தொடங்கியது.
பிரித்தானிய வகை, பிரேசில் வகை, தென்னாப்பிரிக்க வகை, இந்திய வகை என பல வகைகள்! அதில் சமீபத்தில் மூன்று திடீர் மாற்றங்கள் கொண்ட ஒரு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி கலக்கத்தை உண்டுபண்ணிய நிலையில், அதை தூக்கி சாப்பிடுவது போல தற்போது ஒரு அதி பயங்கர செய்தி வந்துள்ளது.
ஆம், 34 திடீர் மாற்றங்கள் (mutations) கொண்ட ஒரு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அதி பயங்கர திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ், தான்சானியாவிலிருந்து அங்கோலா நாட்டிற்கு வந்த விமானப்பயணிகளிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தான்சானியா நாடு கொரோனா என்று ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தது, அதன் ஜனாதிபதி John Magufuli கொரோனாவுக்கு பலியாகும்வரை! ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு இந்த புதிய வைரஸ் அடங்காது என்பதுடன், வேகமாக அதிகமானோரை இந்த தொற்று தாக்கும் என்பதால், இந்த புதிய கண்டுபிடிப்பு, உலகில் கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டு வருவதை மேலும் தாமதப்படுத்தும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு-https://www.thesun.co.uk/news/14667687/scientists-world-most-mutated-covid-strain/