பச்சிளம் குழந்தை முன்னிலையில் தாய் கொடூர கொலை! பிரித்தானிய இளம் பெண்ணுக்கு வெளிநாட்டில் நடந்த பயங்கரம்
11 மாத குழந்தை முன்னிலையில் 20 வயது இளம் பிரித்தானிய தாய் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண்ணான கரோலின் கௌச் (Caroline Crouch), கிரீஸ் நாட்டைச் சேர்ந்த 32 வயதாகும் கிரேக்க விமானப் படை விமானி Babis Anagnostopoulos என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இந்த இளம் தம்பதிக்கு 11 மாத குழந்தை உள்ளது. இவர்கள் மூவரும் கிரீஸ் தலைநகர் ஏத்தன்ஸ் புறநகரில் உள்ள Glyka Nera பகுதியில் வாழ்ந்து வந்தனர். மேலும், கரோலின் அங்குள்ள Piraeus பல்கலைக்கழகத்தில் படித்துவந்ததாககே கூறப்படுகிறது.
இந்த நிலையில், உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணியளவில் அவர்களது வீட்டுக்குள் 3 திருடர்கள் நுழைந்து, கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். அப்போது அந்தத் திருடர்கள் குழந்தையின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி முதலில் Babis-ஐ கட்டிவைத்துள்ளனர்.
பின்னர், பணம் மற்றும் நகைகள் எங்கு இருக்கின்றன என கேட்டு மிரட்டியுள்ளனர், அப்போது கத்தி கூச்சலிட முயன்ற கரோலினை 11 மாத குழைந்தை முன்னிலையில் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இவர்களது வீட்டில் எதோ தவறாக நடப்பதை அறிந்த பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால் பொலிஸ் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்னர் $18,250 மதிப்புள்ள பணம் மற்றும் நகையை எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
கொல்லையர்கள் வீட்டுக்குள் நுழையும்போது, அவர்களது வளர்ப்பு நாயை கொலை செய்து வேலியில் தொங்கவிடப்பட்டுள்ளது தெரியவந்தது.
கிரேக்கத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடப்பது வழக்கமாக ஆகிவிட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் பச்சிளம் குழந்தையின் முன்னால் தாய் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.