இளவரசர் பிலிப்பிற்கு இரங்கல் தெரிவிப்பது தொடர்பில் அரச குடும்பம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
மறைந்த பிரித்தானியா இளவரசர் பிலிப்பிற்கு இரங்கல் தெரிவிப்பது தொடர்பில் அரச குடும்பம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் (99) ஏப்ரல் 9ம் திகதி வின்ட்சர் கோட்டையில் உயிர் பிரிந்தது என பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து குவிந்த மக்கள் அரண்மனை முன் மலர்களை வைத்து இளவரசருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அரண்மனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், தற்போதைய சுகாதார நிலைமையால் பொதுமக்கள் கையொப்பமிட இரங்கல் புத்தகங்கள் வழங்கப்படாது.
இளவரசர் பிலிப் நினைவாக மலர் அஞ்சலி செலுத்துவதற்குப் பதிலாக பொது மக்கள் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை அளிக்க வேண்டும் என்று அரச குடும்பம் கோரிக்கை விடுத்துள்ளது.
An Online Book of Condolence is now available on the Royal website for those who wish to send a personal message of condolence: https://t.co/0w7Vd7kYq0
— The Royal Family (@RoyalFamily) April 9, 2021
Visit https://t.co/utgjraQQv5 for updates from Buckingham Palace and information about The Duke of Edinburgh's life and work. pic.twitter.com/fkV4FTvhqI
தனிப்பட்ட இரங்கல் செய்தியை அனுப்ப விரும்புவோருக்கு ராயல் இணையதளத்தில் ஒன்லைனில் இரங்கல் புத்தகம் இருக்கிறது என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.