சாலையில் திடீரென பெய்த பண மழை! அள்ளிய மக்கள்... வைரலாகும் வீடியோ
சிலி நாட்டில் சாலையில் பணமழை பெய்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது.
தகவல்களின்படி, புடஹுவேல் நகரில் கொள்ளையர்கள் சூதாட்டக் கூடத்தை கொள்ளையடித்து, ஊழியரை துப்பாக்கியால் மிரட்டி பணத்தை எடுத்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் பொலிசார் கொள்ளையர்களை துரத்தத் தொடங்கினர். அப்போது நெடுஞ்சாலையில் கொள்ளையர்கள் திருடிய பணத்தை வைத்திருந்த பையை தூக்கி வீசிய போது சாலை முழுவதும் பண நோட்டுகள் பறந்தது.
A violent robbery at a store ended in a police car chase, money raining down on a highway and six suspects getting arrested in Santiago, Chile#chile #santiago #chase #anews pic.twitter.com/KeHtPTQugh
— ANews (@anews) October 21, 2022
இதையடுத்து சாலையில் இருந்த சில பொதுமக்கள் பணத்தை எடுக்க தொடங்கினார்கள், இதை பொலிசார் தடுத்தனர்.
பிபிசி வெளியிட்ட தகவலின்படி கொள்ளையர்கள் $10,300 பணத்தை கொள்ளையடித்திருக்கின்றனர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் 6 பேரை கைது செய்ததோடு சாலையில் வீசிய பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.