தன்னுடைய சொந்த தலையை வெட்டி உயிரிழந்த புத்த துறவி! ஏன் தெரியுமா? எழுதி வைத்திருந்த குறிப்பு
தாய்லாந்தில் புத்த துறவி ஒருவர் தன்னுடைய மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று தன்னுடைய தலையை வெட்டி பலி கொடுத்துள்ளார்.
தாய்லாந்தை சேர்ந்த 68 வயது மதிக்கத்தக்க Thammakorn Wangpreecha என்ற புத்த துறவி, தன்னுடைய மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்ற நம்பிக்கையில், அங்கிருக்கும் கோவிலில் தனது தலையை வெட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவரது சகோதரர் பூன்செர்ட் பூன்ரோட்(Booncherd Boonrod) கூறுகையில், அவர் இறப்பதற்கு முன் ஒரு குறிப்பை எழுதி வைத்து விட்டு சென்றுள்ளார்.
அதில், தன்னுடைய தலையை வெட்டுவது, புத்தரை புகழ்வதற்கான வழி என்று குறிப்பிட்டுள்ளதாக கூறினார்.
மேலும், இதை அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக திட்டமிட்டுவ் அந்ததாகவும், அவருடைய தலையையும் ஆன்மாவையும் வழங்குவதன் மூலம், அடுத்த வாழ்க்கையில் இறைவன் அருளால் அவர் ஒரு உயர்ந்த ஆன்மீக மனிதனாக மறு பிறவி எடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் இப்படி செய்துள்ளார்.
இதையடுத்து அவரது உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு, வடகிழக்கு தாய்லாந்தின் Nong Bua Lamphu-வில் உள்ள வாட் பூ ஹின் கோயில் அருகில் இறுதிச்சடங்கு நடந்ததாகவும், அவரது சவப்பெட்டியில் தலையுடன் ஒரு தனி கலசத்தில் வைத்ததாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த துறவியை பின்பற்றுவர்களில் ஒருவரான துறவி கூறுகையில், அவர் தன்னுடைய இலக்கை நிறைவேற்றி அறிவொளியை சந்தித்துவிட்டார் என்று கூறியுள்ளார்.
ஆனால், National Office of Buddhism உள்ளூர் அரசாங்கத்திடம் இந்த நடைமுறையை நாங்கள் ஊக்குவிக்கவில்லை என்றும், இதனால் இது போன்று மீண்டும் ஒன்று நடைபெற்றுவிடக் கூடாது என்பதால் இது குறித்து விளம்பரப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.