monkeypox... லண்டன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிறார் ஒருவர்
லண்டன் மருத்துவமனையில் monkeypox பாதிப்பால ஆபத்தான நிலையில் சிறார் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் முதன் முதலாக உறுதி செய்யப்பட்ட monkeypox தொற்றானது தற்போது உலகின் 14 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரித்தானிய சுகாதராத்துறை செயலர் சஜித் ஜாவித் வெள்ளியன்று தெரிவிக்கையில், நாட்டில் மேலும் 11 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்,
இதனால் மே 6ம் திகதிக்கு பின்னர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மொத்தம் 20 என அதிகரித்துள்ளது என்றார். பெரும்பாலானவர்களுக்கு லேசான பாதிப்பு என்பதால், நாம் மீண்டுவர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, லண்டன் மருத்துவமனையில் சிறார் ஒருவர் monkeypox தொற்றால் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் பெரியம்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய குரங்கம்மை குறித்த 2020ல் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், மூன்றில் ஒரு பிரித்தானியரே தொடர்புடைய தொற்றில் இருந்து பாதுகாப்பாக உள்ளனர் என எச்சரித்திருந்தது.
தற்போது உலகின் 14 நாடுகளில் சுமார் 145 பேர்களுக்கு monkeypox தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவுக்கு வெளியே தற்போது monkeypox தொற்றானது வியாபித்துள்ள நிலையில், இது உலக நாடுகளுக்கு மிக விரைவில் அச்சுறுத்தலாக உருமாறும் என நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், சமூக பரவலாக உருமாறிவிட்டதாகவும், அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போது, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜேர்மனி, போர்த்துகல், இத்தாலி, சுவீடன், பிரான்ஸ், பெல்ஜியம், அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் monkeypox தொற்றானது வியாபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.