உச்சம் தொட்ட எண்ணிக்கை... உலகளாவிய சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்த WHO
குரங்கம்மை தொற்றானது இதுவரை 70 நாடுகளில் உறுதி செய்துள்ளதை அடுத்து உலகளாவிய சுகாதார அவசரநிலையாக பிரகடனம் செய்துள்ளது உலக சுகாதர அமைப்பு.
குரங்கம்மை தொற்றானது மேலும் பல நாடுகளில் பரவும் வாய்ப்புகள் அதிகம் என குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, சர்வதேச நாடுகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு தேவை எனவும் குறிப்பிட்டுள்ளது.
அவசரநிலை பிரகடன அறிவிப்பு என்பது பெரும்பாலும் உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் ஒரு வேண்டுகோளாக செயல்படுகிறது எனவும் பாதிப்புக்கு அதிக கவனம் செலுத்த வாய்ப்பாக அமைகிறது எனவும் WHO சுட்டிக்காட்டியுள்ளது.
WHO declared a global health emergency over the monkeypox outbreak. So far this year, there have been more than 16,000 cases of monkeypox in more than 75 countries. https://t.co/knjO2BQucN pic.twitter.com/8c4L2lRPnD
— Reuters (@Reuters) July 23, 2022
ஆனால் இதுபோன்ற அவசரநிலை பிரகடனங்கள் எப்போதும் கலவையான தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது. குரங்கம்மை தொற்றானது பல தசாப்தங்களாக மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் மட்டுமே உறுதி செய்யப்பட்டு வந்துள்ளது.
ஆனால் கடந்த மே மாதம் ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் பல டசின் தொற்றாளர்கள் அடையளம் காணப்பட்டனர்.
பிரித்தானியாவில் மட்டும் 2000 தொற்றாளர்கள் தற்போது வரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் 2,500 க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் முதல்முறையாக இரு குழந்தைகளில் குரங்கம்மை தொற்றானது அங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மே மாதத்தில் இருந்து 74 நாடுகளில் 16,000 க்கும் மேற்பட்டோர் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், குரங்கம்மையின் ஆபத்து, உலக அளவில் மற்றும் அனைத்து பகுதிகளிலும் மித அளவில் உள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் இதனால் ஏற்படும் ஆபத்து அதிகரித்து காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.