ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான மொராக்கோ நாட்டினர்: சியூட்டா எல்லையில் பதற்றம்
மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஸ்பெயின் எல்லைப்புற நகரான சியூட்டாவிற்குள் நுழைந்து இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான மொராக்கோ நாட்டினர்
வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய ஆதிக்கப் பகுதியான சியூட்டாவின்(Ceuta) எல்லைப் பகுதிக்குள் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கானோரின் அத்துமீறிய நுழைந்ததை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு முற்றிலும் சிதைப்பட்டு இருப்பதாகவும், உடனே அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு எல்லை பாதுகாப்பிற்கு இராணுவத்தை அனுப்ப வேண்டும் எனவும் உள்ளூர் அதிகாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துமீறி நுழையும் ஆயிரக்கணக்கானோர்(பெரும்பாலானோர் மொராக்கோவை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை சேர்ந்தவர்கள்) இளைஞர், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் நுழையும் குடும்பத்தினர் ஆவார்க்ள்.
தாராஜல் எல்லை வழியாகவும், கடற்கரை வழியாகவும் சியூட்டாவிற்குள் நுழையும் இந்த மக்களில் சிலர் “விவா எஸ்பானா”(Viva España!) என்ற கோஷங்களை எழுப்பியும், சாலைகளில் நடனமாடியும் வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எல்லை காவலில் இருந்த அதிகாரிகள் நிலைமையை மிகவும் மோசமானதாக விவரித்துள்ளனர்.
இதற்கு முந்தைய புதன்கிழமை அன்று, ஆபத்தான முறையில் பலர் கடலில் நீந்தி சென்று ஸ்பெயின் நாட்டிற்கு நுழைய முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 3 பேர் வரை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மொராக்கோ மெளனம்
இந்த சம்பவம் தொடர்பாக மொராக்கோ அதிகாரிகள் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அதே நேரத்தில் இந்த நெருக்கடிக்கு பதிலளித்த ஸ்பெயின் உள்துறை அமைச்சகம், குடிமக்களும் எல்லை பாதுகாப்பும் முதன்மையானவை என்று உறுதிப்படுத்தினார்.
ஆனால் குடி பெயர்வு தொடர்பான பிரச்சனைகளுக்கு எல்லாம் தேசிய அளவிலான அவசரநிலை பிரகடனம் செய்ய முடியாது என மறுத்துவிட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |