உலகிலேயே கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கிய முதல் நகரம்! வெளியான முக்கிய அறிவிப்பு
உலகிலேயே எந்த நாடோ நகரமோ இதுவரை கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்காத நிலையில் முதன் முறையாக ரஷ்யாவில் உள்ள முக்கிய நகரம் கட்டாயமாக்கியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒரு ஆண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்தி வருகிறது. முதல் அலையிலிருந்து மீண்டு உலகம் சற்று இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் இரண்டாம் அலை உலகை உலுக்கியது.
இந்நிலையில் 3வது அலையும் வரும் என பலர் கூறி வருகின்றனர். கொரோனாவுக்கு முடிவு கட்ட தடுப்பூசி தான் பிரதான வழி என பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிபுணர்கள், தடுப்பூசி போட மக்களை ஊக்குவித்து வருகின்றனர்.
எனினும், இன்று வரை எந்த நாட்டிலும் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படவில்லை.
இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன் ரஷ்ய தடுப்பூசியை கட்டாயமாக்காது என அறிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது, சுகாதார ஊழியர்கள் மட்டுமின்றி பொது துறையில் பணியாற்றும் தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.