பல பில்லியன் டொலர் மதிப்புள்ள பிரம்மாண்ட பாலத்தின் மீது உக்ரேனிய தாக்குதல்! மாஸ்கோ அளித்த விளக்கம்
கிரிமியன் தீபகற்பத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தின் மீது உக்ரேனிய தாக்குதல் நடத்தியதில் எந்த சேதமும் ஏற்படவில்லை என மாஸ்கோ தெரிவித்துள்ளது.
தீபகற்பத்தை இணைக்கும் பாலம்
உக்ரைனில் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு புரட்சியைத் தொடர்ந்து, கிழக்கில் கீவ் மற்றும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு இடையேயான சண்டையின் தொடக்கத்தில், 2014ஆம் ஆண்டு ரஷ்யா கிரிமியன் தீபகற்பத்தை இணைத்தது.
அதனைத் தொடர்ந்து, கிரிமியன் மற்றும் ரஷ்யாவை இணைக்கும் பல பில்லியன் டொலர் மதிப்புள்ள பிரம்மாண்ட பாலம் 2018யில் திறக்கப்பட்டது.
இது உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளாலும், மாஸ்கோ தீபகற்பத்தைக் கைப்பற்றியதன் மிகவும் அடையாளமாக கருதப்படுகிறது.
ஆனால், 2022யில் ரஷ்யா தனது முழு அளவிலான இராணுவ படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து, உக்ரைன் 19 கிலோமீற்றர் பலத்தை மீண்டும் மீண்டும் குறி வைத்தது.
உக்ரேனிய தாக்குதல்
2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு டிரக்கில் ஏற்றப்பட்ட குண்டு பாலத்தில் வெடித்ததால் அது கடுமையாக சேதமடைந்தது. இதன் காரணமாக போக்குவரத்து திறன் குறைந்ததால், ரஷ்யா பல மாத பழுதுபார்ப்புகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், இப்பாலத்தின் மீது உக்ரேனிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று, பாலத்தின் நீருக்கடியில் உள்ள தூண்களில் ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததாக உக்ரைனின் SBU பாதுகாப்பு சேவை கூறியது.
அத்துடன் நீரில் இருந்து வெடிப்பு வெளியே வருவது மற்றும் குப்பைகள் பறக்கும் காட்சிகளை வெளியிட்டது.
இதுகுறித்து கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், "உண்மையில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது. எதுவும் சேதமடையவில்லை. பாலம் வேலை செய்கிறது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |