பிரித்தானியாவை போல் எங்களை சீண்டினால் இது தான் கதி! உலக நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா
பிரித்தானியாவை போல் எங்களை சீண்டினால் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என உலக நாடுகளுக்கு ரஷ்ய பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று தனது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பிரித்தானியா போர்க்கப்பலை, ரஷ்ய தனது போர்க்கப்பல் மற்றும் போர்விமானம் மூலம் எச்சரிக்கை விடுக்கும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தியும், பிரித்தானியா போர்க்கப்பல் பயணிக்கும் பாதையில் குண்டு போட்டும் விரட்டியடித்தது.
மேலும், இச்சம்பவம் தொடரில் ரஷ்யாவில் உள்ள பிரித்தானியா தூதரகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், பிரித்தானியா போர்க்கப்பல் போல் இனி யாராவது எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து எங்களை சீண்டினால் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ரஷ்ய துணை வெளியுறவுத்துறை அமைச்சர் Sergei Ryabkov பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முதன்மையானது. அமைதியான வழி உதவாது என்றால், ரஷ்ய தனது ஆயுதப் படைகளைப் பயன்டுத்தி தனது எல்லைகளை பாதுகாக்கும்.
இது மேற்கத்திய நாடுகளுக்கு புரியவில்லை என்றால், நாங்கள் கப்பல் பயணிக்கும் பாதையில் மட்டுமல்ல, கப்பல் மீதே குண்டு வீசுவோம் என Sergei Ryabkov பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.