அலட்சியம் வேண்டாம்! ஆபத்தான கொரோனா மாறுபாடு இந்த நாட்டில் கண்டுபிடிப்பு: நிபுணர்கள் எச்சரிக்கை
உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் கொரோனா மாறுபாடு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டதாக நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் ஒன்றரை வருடங்களாக உலகம் முழுவதும் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகின்றது. அவ்வப்போது கொரோனாவில் இருந்து புதிய மாறுபாடுகள் கண்டறியப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் உலகம் தீயாய் பரவி வரும் R.1 மாறுபாடு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த மாறுபாடு கடந்த ஆண்டு ஜப்பானில் முதல் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது அமெரிக்கா உட்பட 35 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. நோய் கட்டுப்பாடு மையம் வெளியிட்ட அறிக்கையில் அதிக ஆபத்தான R.1 கொரோனா மாறுபாடு மீண்டும் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
R.1 மாறுபாடு காரணமாக பாதிப்புகள் குறைவாக இருந்தாலும் அது பயங்கர ஆபத்து என்று நிரூபிக்கப்பட்டதால் அலட்சியம் காட்ட வேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.