உலகிலேயே மிகவும் ஆபத்தான பழங்குடியின மக்கள் இவர்கள் தான்! ஏன் தெரியுமா?
ஆப்பிரிக்காவில் வாழும் பழங்குடியினர் தங்கள் பகுதிக்கு யாராவது நுழைந்தால் அவர்களை கொடூரமாக கொலை செய்துவிடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் பல்வேறு இடங்களில் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இந்த நவீன காலத்திலும் வித்தியாசமான சடங்குகளையும், மரபுகளையும் பின்பற்றி வருகின்றனர்.
அந்த வகையில் எத்தியோப்பியா முர்சியில் வாழும் மக்களை கொடூரமான பழங்குடியியினர் என்று குறிப்பிடுகின்றனர். இவர்கள் மூட நம்பிக்கை பெயரில் பல பயங்கரமான பழைய நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர்.
தெற்கு எத்தியோப்பியா மற்றும் சூடான் எல்லையில் உள்ள ஓமன் பள்ளத்தாக்கில் பல வருடங்களாக இவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பழங்குடியின மக்களின் மொத்த மக்கள் தொகை சுமார் 10 ஆயிரம் ஆகும்.
இங்கு வசிக்கும் பெண்கள் தீய சக்திகளில் இருந்து தற்காத்து கொள்ள அவர்களது கீழ் உதட்டில் மரம் அல்லது களிமண்ணால் செய்யப்பட்ட டிஸ்கை அணிவார்கள்.
மக்களை கொல்ல கூர்மையான பயங்கர ஆயுதங்களை இவர்கள் வைத்துள்ளனர். அதுபோல் இவர்களின் அனுமதியின்றி தங்கள் பகுதிக்குள் யாராவது நுழைந்தால் அவர்களை கொடூரமாக கொன்று புதைத்து விடுகின்றனர்.