கழிப்பறைக்குள்ளிருந்து நீட்டிக்கொண்டிருந்த சின்னஞ்சிறிய கை... அலறிய இளம்பெண்: லண்டனில் நடந்த திகில் சம்பவம்
லண்டனில், தன் மகள் மருத்துவமனையிலிருந்த கழிவறைக்குச் சென்றிருந்த நிலையில், அங்கிருந்து அவர் அலறியதைக் கேட்ட தாய் ஓடோடிச் சென்று பார்க்க, அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விடயம் ஒன்று அவருக்கு காத்திருந்தது.
வயிற்று வலி காரணமாக தன் மகளான Lalene Malikஐ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார் Sumra. மருத்துவமனைக்குச் சென்றிருந்த Lalene அசௌகரியமாக உணரவே, தனக்கு மலச்சிக்கலாக இருக்கலாம் என்று எண்ணி கழிவறைக்குச் சென்றுள்ளார்.
பின்னர் ஃப்ளஷ் செய்வதற்காக திரும்பிய Lalene அலறியதைக் கேட்ட Sumra பதறியடித்து ஓடிச் சென்று பார்க்க, திகிலில் உறைந்துள்ளார் அவர். அங்கே, கழிப்பறைக்குள் பிஞ்சுக் குழந்தை ஒன்றின் கை கழிப்பறையின் கோப்பைக்குள்ளிருந்து நீட்டிக்கொண்டிருந்திருக்கின்றது.
அதாவது தான் கர்ப்பமாக இருந்தது தெரியாமல், தனக்கு மலச்சிக்கல் என்றே எண்ணிக்கொண்டிருந்திருக்கிறார் Lalene. அவர் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றபோது, அந்த குழந்தை வெளியேறி கழிப்பறைக்குள் விழுந்துவிட்டிருக்கிறது. உடனே மருத்துவர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட, அவர்கள் வந்து சுமார் ஏழு நிமிடங்கள் போராடி, அந்தக் குழந்தையை மீட்டுள்ளார்கள்.
இப்ராஹிம் என பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை பேச்சு மூச்சில்லாமல் கிடக்க, Dr Ewa Grocholski என்னும் பெண் மருத்துவர் அந்த குழந்தைக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றியிருக்கிறார். விடயம் என்னவென்றால், Lalene கழிப்பறையைக் கவனிக்காமல் ஃப்ளஷ் செய்திருந்தால், அந்தக் குழந்தையைக் காப்பாற்ற இயலாமல் போயிருக்கும் ஒரு பயங்கர நிலை உருவாகியிருக்கக்கூடும்.
குழந்தை இப்ராஹிமுக்கு தற்போது ஆக்சிஜன் அளிக்கப்பட்டு மருத்துவமனை ஊழியர்களால் அவன் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், அவன் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதற்கிடையில், வெளிநாடு ஒன்றிலிருக்கும் தன் கணவர் இந்த விடயம் அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார் Lalene.