இறந்த குட்டியை 11 நாட்களாக தாங்கிச் செல்லும் தாய் டால்பின்., மனதை உருக்கும் காட்சி
இறந்த குட்டியை 11 நாட்களாக தாங்கிச் செல்லும் தாய் டால்பினின் மனதை உருக்கும் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்தியப் பெருங்கடலில், Fraggle என அழைக்கப்படும் பெண் டால்பின் தனது இறந்த குட்டியை நீரில் மூழ்காமல் தாங்கி சென்ற மனதை உருக்கும் காட்சி விஞ்ஞானிகள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களால் பதிவு செய்யப்பட்டது.
குட்டி பிறந்து இரண்டு வாரங்களே ஆன நிலையில், அதிக சுவாச வீதம் காரணமாக அது உயிரிழந்தது. அதனை தாய் டால்பின் தனது முதுகில் தாங்கி, நீரில் மூழ்காமல் பல நாட்கள் எடுத்துச் சென்றது. இந்த காட்சி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் Geographe Marine Research அமைப்பு வெளியிட்ட இந்த வீடியோவில், “ஃப்ராகிள் கடந்த காலத்தில் நான்கு குட்டிகளை இழந்துள்ளது. இம்முறை கூட அது தன் குட்டியை உயிருடன் வைத்திருக்க முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.
விஞ்ஞானிகள் கூறுவதாவது, டால்பின்கள் மிகுந்த சமூக உணர்வும், அறிவும் கொண்டவை. குட்டி இறந்தாலும், தாய் டால்பின் அதை நீண்ட நாட்கள் தாங்கிச் செல்லும் பழக்கம், ‘மரண துக்க சடங்கு’ எனக் கருதப்படுகிறது.
சில சமயங்களில் கூட்டத்தில் உள்ள மற்ற டால்பின்களும் துக்கத்தில் பங்கேற்று, தாய் டால்பினுக்கு துணை நிற்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், விலங்குகளின் உணர்ச்சிகள் மனிதர்களின் உணர்ச்சிகளுக்கு இணையானவை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |