ஏர் இந்தியா விபத்து... லண்டன் தாயார் ஒருவரின் இறுதி ஆசை: அனாதையான இரண்டு பெண் பிள்ளைகள்
இறந்த மனைவியின் அஸ்தியை இந்தியாவில் கரைத்துவிட்டு லண்டனுக்குத் திரும்பிச் சென்ற கணவர் ஏர் இந்தியா விமான விபத்தில் மரணமடைந்த சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறுதி ஆசையை நிறைவேற்ற
இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான அர்ஜுன் படோலியா, குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது இறந்த மனைவியின் அஸ்தியை உள்ளூர் ஆற்றில் கரைக்க சென்றிருந்தார்.
படோலியாவின் மனைவி பாரதிபென் ஏழு நாட்களுக்கு முன்பு லண்டனில் பரிதாபமாக இறந்தார். அவரது இறுதி ஆசை என்னவென்றால், ஒரு மலர் கலசத்தில் அவரது அஸ்தி இந்தியாவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதுதான்.
மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்ற இந்தியா திரும்பிய படோலியா, தனது கிராமத்தில் உறவினர்களுடன் பல இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு, வியாழக்கிழமை தனது இரண்டு மகள்களைப் பார்க்க லண்டனுக்குத் திரும்பத் தயாரானார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் பயணித்த ஏர் இந்திய விமானம் விபத்தில் சிக்கிய நிலையில், படோலியாவின் நான்கு மற்றும் 8 வயது பெண் பிள்ளைகள் அனாதையாகியுள்ளனர்.
இயந்திரம் நின்று போவது
போயிங் 787 ட்ரீம்லைனர் விமானமானது புறப்பட்டு சில நிமிடங்களில், உள்ளூர் நேரப்படி 1.40 மணியளவில் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த அனைவரும், ஒருவர் தவிர மரணமடைந்துள்ளனர்.
229 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் இறந்ததை ஏர் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் உயிர் பிழைத்த ஒரே நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிவித்துள்ளது.
விமானம் புறப்பட்ட பிறகு மிக முக்கியமான கட்டத்தில் திடீரென அதன் கட்டுப்பாட்டு விசைகள் செயலிழந்திருக்கலாம் என்று விமான நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த துயர சம்பவத்திற்கான சாத்தியமான காரணங்களாக கூறப்படுவது, காற்றில் ஏற்படும் விரைவான மாற்றம், இயந்திரம் நின்று போவது அல்லது இரண்டு இயந்திரங்களிலும் பறவை மோதிக் கொள்வது ஆகியவை அடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |