கொரோனா பொதுமுடக்க காலகட்டத்தில் தினமும் ரயிலில் பயணம் செய்த இளம்பெண்: பின்னர் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை
கொரோனா காலகட்டத்தில் நாடே முடங்கிக் கிடந்த நேரத்தில் ஒரு பெண் தினமும் ரயிலில் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
பிரித்தானியாவிலுள்ள Chadderton என்ற இடத்தைச் சேர்ந்த Georgia Leigh (23) என்ற அந்த பெண், தினமும் இருமுறை மான்செஸ்டரிலிருந்து யார்க்குக்கு பயணித்துள்ளார்.
வேலைக்குச் செல்வதாகக் கூறிக்கொண்டு அவர் தினமும் பயணித்த நிலையில், அவர் செய்த வேலை என்னவென்று தெரியவந்துள்ளதையடுத்து கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அவர், Moston என்ற இடத்தைச் சேர்ந்த Jack Smedley (24) என்பவரது ஏற்பாட்டின்பேரில் போதைப்பொருட்களை மான்செஸ்டரிலிருந்து யார்க்குக்கு கொண்டு சென்று, அங்கு இந்த போதைக் கும்பலைச் சேர்ந்த ஒருவரிடம் கொடுத்துவந்துள்ளது தெரியவந்தது.
சில நேரங்களில் Georgiaவுடன் அவரது தோழியான Nicole Crighton (22) என்ற பெண்ணும் பயணித்துள்ளார்.
Georgia போதைப்பொருள் கடத்துவது தெரியவந்ததையடுத்து அவரது மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் அவர் அனுப்பிய குறுஞ்செய்திகளும் அவரது குற்றத்துக்கு ஆதாரமாக அமைய, அவருக்கு நான்கு ஆண்டுகள், இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Georgiaவின் தோழியான Nicoleக்கு இரண்டாண்டுகள் சிறையும், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட Jackக்கு நான்கரையாண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.