6,60,000 யூரோ லஞ்சம் வாங்கிய எம்.பி? ஏதற்காக? ஜேர்மனியில் கொரோனா நெருக்கடியின் போது நடந்த மாபெரும் ஊழல் அம்பலம்
ஜேர்மனியில் முகக் கவசம் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.
கன்சர்வேடிவ் எம்.பி Georg Nüsslein-ன் முகக் கவச சப்ளையருக்கு ஒப்பந்தத்தை வழங்க 6,60,000 யூரோ லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
லஞ்சமாக வாங்கப்பட்ட பணம் Georg Nüsslein-ன் நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதாகவும், வருமான வரியில் அந்த பணம் கணக்கில் காட்டப்படவில்லை என உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Georg Nüsslein-ன் 2002 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார், அதுமட்டுமின்றி 2014 முதல் நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.
வியாழக்கிழமை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் ஜேர்மனி மற்றும் Liechtenstein-ல் Georg Nüsslein-னுக்கு சொந்தமான 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தினர்.
ஜேர்மனியின் நாடாளுமன்றத்தின் கீழ் சபையான Bundestag வியாழக்கிழமை Georg Nüsslein மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏதுவாக அவருக்கான immunity-யை நீக்க ஒருமனதாக வாக்களித்தது.
Georg Nüsslein வழக்கில் நீதித்துறை தற்போது கடமையைச் செய்யலாம் என Bundestag immunity குழு உறுப்பினர் Marco Buschmann கூறினார்.