அடுத்த ஆண்டு CSK அணிக்காக நான் விளையாடுவேனா எனத் தெரியவில்லை! ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தோனி
ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக நான் வினையாடுவேனா எனத் தெரியவில்லை என தோனி கூறியுள்ளது ரசிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
2021 ஐபிஎல் தொடரில் இன்று செப்டம்பர் 7ம் திகதி துபாய் மைதானத்தில் நடக்கும் 53வது போட்டியில் சென்னை-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்து பந்து வீசி வருகிறது.
டாஸின் போது அடுத்த ஆண்டு உங்களை மீண்டும் மஞ்சள் நிற ஜெர்சியில் பார்க்க முடியுமா என சிஎஸ்கே கேப்டன் தோனியிடம் நியூசிலாந்து கிரிக்கெட் வர்ணனையாளர் டேனியல் மோரிசன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தோனி, அடுத்த வருடம் மஞ்சள் உடையில் நீங்கள் என்னைப் பார்க்கலாம். ஆனால் சிஎஸ்கே அணிக்காக நான் விளையாடுவேனா எனத் தெரியாது.
நிலையில்லாத பல விஷயங்கள் நடக்கவுள்ளன. இரு புதிய அணிகள் வருகின்றன.
வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் விதிமுறைகள் என்னவென்று தெரியவில்லை.
எத்தனை இந்திய வீரர்கள், எத்தனை வெளிநாட்டு வீரர்களைத் தக்கவைக்கலாம் எனத் தெரியவில்லை.
விதிமுறைகள் தெரியாமல் எதுவும் முடிவெடுக்க முடியாது. எனவே அதுவரை காத்திருப்போம். அனைவருக்கும் நல்லதாகவே அமையும் என நம்புவோம் என தோனி கூறினார்.
தோனியின் இந்த பதில் சென்னை ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.