இனியும் இந்த தவறை செய்தால்... பந்துவீச்சாளர்களை எச்சரித்த தோனி
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டியின் முடிவில், பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்து வீச்சாளர்களை எச்சரித்துள்ளார்.
பந்து வீச்சாளர்கள் செய்த தவறு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 217 ஓட்டங்களைக் குவித்தது.
@cricbuzz
இதனை அடுத்து களம் இறங்கிய லக்னோ அணி அபாரமாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தார்கள். இப்போட்டியில் ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவும் என எதிர்பார்க்கப்பட்டது.
@cricbuzz
ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதில் வேகப்பந்துவீச்சாளர்கள் அதிகமாக No ballகளும், Wideகளும் வீசினார்கள்.
தோனி எச்சரிக்கை
இந்த நிலையில் வெற்றிக்கு பிறகு கருத்து தெரிவித்த கேப்டன் (mahendra singh dhoni) தோனி,
”இன்றைய ஆட்டத்தில் இரண்டு அணிகளுமே ஓட்டங்களை வாரி குவித்தார்கள். முதலில் நாங்கள் ஆடுகளம் எப்படி இருக்கும் என்பதை யோசித்தோம். ஆனால் எங்களுக்கு முதல் போட்டியே சிறப்பாக அமைந்து விட்டது.”
@cricbuzz
”சேப்பாக்கம் ஆடுகளம் முதலில் தோய்வாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் இங்கு ஓட்டங்களை அதிவேகமாக குவிக்க முடிகிறது. வேக பந்துவீச்சாளர்கள் தங்களுடைய செயல்பாட்டில் முன்னேற்றம் செய்ய வேண்டும்."
"களத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப வகையில் பந்து வீசுங்கள். பில்டர்கள் எங்கே நிற்கிறார்களோ பந்து அங்கே செல்லும் வகையில் நீங்கள் உங்கள் திட்டத்தை மாற்றி அமைத்து பந்து வீச வேண்டும்.”
@cricbuzz
”இன்றைய ஆட்டத்தில் நாங்கள் கூடுதலாக நோபால் மற்றும் ஓயிடு பால்களை வீசினோம். இது நிச்சயம் சரியான விஷயம் கிடையாது. நோபால்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் நீங்கள் புதிய கேப்டன் கீழ் விளையாட நேரிடும். இது என்னுடைய இரண்டாவது எச்சரிக்கை. இல்லை எனில் அதன் பிறகு நான் சென்று விடுவேன்” என்று தோனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.