அமெரிக்காவிலிருந்து ஈத்தேன் இறக்குமதி செய்யும் முகேஷ் அம்பானி - ட்ரம்ப் மகிழ்ச்சி, சீனாவிற்கு பாதிப்பு
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அமெரிக்காவிலிருந்து ஈத்தேன் இறக்குமதி செய்யவுள்ளது.
ஆசியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி தலைமையிலுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அமெரிக்காவின் Gulf Coast பகுதியில் இருந்து திரவ ஈத்தேன் (Liquefied Ethane) இறக்குமதி செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது, முன்னதாக சீனாவிற்கு செல்லவிருந்த கப்பல் இப்போது இந்தியாவின் குஜராத்தில் உள்ள தாஹேஜ் துறைமுகத்திற்கு திருப்பப்பட்டுள்ளது என்பது முக்கிய முன்னேற்றமாகும்.
இந்த நடைமுறை, அமெரிக்கா-இந்தியா வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இருக்கிறது. Bloomberg இதை "Making America Great Again" என்று வர்ணித்துள்ளது.
சீனாவிற்கு மாற்றாக இந்தியா அமெரிக்காவின் ஈத்தேன் இறக்குமதியாளராக மாறுவதால், அமெரிக்கா-சீனா வர்த்தக சமநிலையை மாற்றும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் குறைந்த செலவில் மற்றும் அதிக செயல்திறனுடன் ஈத்தேனைப் பயன்படுத்தி அதன் பெட்ரோக்கெமிக்கல் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியக் கடற்படைக்கு 17 போர் கப்பல்கள், 9 நீர்மூழ்கிக் கப்பல்கள்: ரூ.2.4 லட்சம் கோடியில் புதிய திட்டங்கள்
இது இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு சாலைகளின் செயல்திறனை மேம்படுத்தும், அத்துடன் அமெரிக்கா-இந்தியா வர்த்தக பிணைப்பை உறுதிப்படுத்தும்.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், BRICS நாடுகளின் "அமெரிக்கா எதிர்ப்பு" கொள்கைகளுக்கு எதிராக 10% கூடுதல் வரி விதிக்கப்படும் எனக் கடும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் அமெரிக்க உற்பத்திக்கு ஆதரவாக செயல்படுவது ட்ரம்ப் அரசுக்கு சாதகமாக இருக்கலாம் என நிபுணர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.
சீனாவை விலக்கி, இந்தியாவை நம்பும் அமெரிக்கா எனும் தருணத்தில், ரிலையன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |