இரண்டு குழந்தைகளை கட்டியணைத்தபடி 190 அடி உயர கட்டிடத்திலிருந்து குதித்த பெண்: ரஷ்யாவில் பயங்கரம்
ரஷ்யாவில், பெண் ஒருவர் தன் குழந்தைகள் இரண்டையும் கட்டியணைத்தபடி 19ஆவது மாடியிலிருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்கோவில் வாழும் Dmitry (35) என்ற இராணுவ அதிகாரியின் மனைவியாகிய Olga Zharkova (34) என்ற அந்த பெண், குழந்தை பிறந்த பிறகு கடும் மன அழுத்தத்திற்குள்ளாகியிருக்கிறார்.
கணவர் இராணுவப் பணி நிமித்தமாக நீண்ட காலம் தன்னைப் பிரிந்திருப்பதாக அவர் தன் வருத்தத்தை பல முறை வெளிப்படுத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில், மூன்று வயதாகும் தன் மூத்த மகனையும், பிறந்து ஒரு மாதமே ஆகும் தன் இளைய மகனையும் கட்டியணைத்தபடி தான் வாழ்ந்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 19ஆவது மாடியிலிருந்து குதித்திருக்கிறார் Olga.
இதில், Olga மற்றும் அவரது பிள்ளைகள் இருவர் என மூவருமே சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்கள்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த Olgaவின் கணவர் Dmitry கடும் அதிர்ச்சிக்குள்ளாக, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்துள்ளார்கள்.
இந்த கோர சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.