10 மாதம் கோமாவில் இருந்த இளம் தாய் திடீரென்று கண்விழித்து சொன்ன வார்த்தை! நெகிழ்ச்சி சம்பவத்தின் பின்னணி
இத்தாலியில் இளம் தாய் ஒருவர் 10 மாதங்களுக்கு மேலாக கோமாவில் இருந்த நிலையில், அவர் திடீரென்று கண்விழித்து பேசியது குடும்பத்தினரிடையே பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இத்தாலியின் Tuscany பகுதியைச் சேர்ந்தவர் Cristina Rosi. 37 வயது மதிக்கத்தக்க இவர் கர்ப்பிணியாக இருந்த போது, கடந்த ஆண்டு ஜுலை மாதம் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அப்படியே கோமா நிலைக்கு சென்றார்.
அதன் பின் இவருக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு Caterina என பெயர் வைக்கப்பட்டது. இந்த குழந்தையை அவர் C-section வழியாக பெற்றெடுத்தார்.
இருப்பினும், அவர் தொடர்ந்து கோமா நிலையில் இருந்த நிலையில், திடீரென்று படுக்கையில் இருந்து கணவிழித்த அவர், தன் மகளைப் பற்றி Mamma என்று கேட்டுள்ளார்.
இது குறித்து அவருடைய கணவரான Succi, இதைக் கேட்ட போது, நானும் என் தாயாரும் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைந்தோம். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
பல துன்பங்களுக்கு பிறகு இது ஒரு உண்மையான மகிழ்ச்சி என்று கூறுவேன். இப்போது அவர் தானாகவே மூச்சு விடுகிறார். மருத்துவ உபகரணங்கள் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால், இன்னும் Cristina Rosi-வால் மற்றவர்களை அடையாளம் காணமுடியவில்லை. இருப்பினும் நிதானமாக இருக்கிறார். அவருக்கு தொடர்ந்து அளிக்கப்படும் சிகிச்சை மூலம், உடலில் முன்னேற்றத்தை காணலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், கணவிழித்த Cristina Rosi தனக்கு பிடித்த பிரபல பாடகியான Gianna Nannini-வின் ஆடியோ ஒன்றைக் கேட்டு கண்கலங்கியுள்ளார். ஏனெனில் அவர் கோமா நிலைக்கு செல்வதற்கு முன், இந்த பாடகியின் நிகழ்ச்சிக்கு கணவருடன் செல்ல முடிவு செய்திருந்தார்.
Cristina Rosi-க்கு இன்னும் தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுவதால், அவரின் சிகிச்சைக்காக கணவர் GoFundMe பக்கத்தில் நிதி திரட்டி வருகிறார்.
எங்களுக்கு இன்னும் நிறைய பணம் தேவை, அது கஷ்டமாக இருந்தாலும், மனைவி கண்விழித்திருப்பது எங்களுக்கு கூடுதல் சக்தியை தருவதாக Succi கூறியுள்ளார்.