சொந்த பிள்ளையை மில்லியன் பவுண்டுகளுக்கு விற்க முயன்ற கொடூர தாயார் சடலமாக மீட்பு
சொந்த பிள்ளையை தற்காலிக கூண்டில் அடைத்து வைத்து, மில்லியன் பவுண்டுகளுக்கு விற்கவும் முயன்ற கொடூர தாயார் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிள்ளையை கவனிக்கத் தவறியதாக
ஸ்கொட்லாந்தின் Ochiltree கிராமத்தை சேர்ந்த 37 வயது Claire Boyle என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிள்ளையை கவனிக்கத் தவறியதாக இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் வியாழக்கிழமை பகல் 7 மணிக்கு அவரது சடலம் மீட்கபப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021ல் Kilmarnock ஷெரிப் நீதிமன்றம் முன்னெடுத்த விசாரணையில், பாயில் தமது 4 வயது மகனை துன்புறுத்தியதாக வெளிச்சத்துக்கு வந்தது.
மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில், சிறுவனுக்கு ரத்தப் புற்றுநோய் பாதிப்பு அல்லது ரத்த உறைதல் பாதிப்பு இருக்கலாம் என குறிப்பிட்டிருந்தனர். தாயாரின் துன்புறுத்தல் தாங்க முடியாமல் சிறுவன் ஜன்னல் வழியாக தப்பிய நிலையிலேயே, மொத்த சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்தது.
ஒரு மழை நாளில் தெருவில் கேட்பாரின்றி அலைந்து திரிந்ததை கவனித்த பொதுமக்கள் சிறுவன் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சிறுவனை மீட்ட பொலிசார், பாயிலின் குடியிருப்புக்கு சென்றுள்ளனர்.
கூண்டில் அடைக்கப்பட்டுள்ளதை
அங்கே, 2 வயது குழந்தை ஒன்று கூண்டில் அடைக்கப்பட்டுள்ளதை கண்டனர். அந்த கூண்டில் இருந்து தப்பிச் செல்லாத வகையில் அது பூட்டப்பட்டிருந்தது. பாயில் மற்றும் அவரது 60 வயது துணைவரும் முதலில் குழந்தைகளை கவனிக்கத் தவறிய குற்றத்தை மறுத்துள்ளனர்.
ஆனால் தொடர் விசாரணையின் முடிவில், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். சிறை தண்டனையில் இருந்து தப்ப, பிள்ளைகளை கவனிக்கலாம் என்றும் பாயில் உறுதி அளித்துள்ளார்.
இந்த நிலையில் 2014ல் மீண்டும் அதிகாரிகளிடம் பாயில் சிக்கினார். அதே ஆண்டு, அந்த குழந்தையை 1 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்க முயன்றதும் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது.
இந்த நிலையில், ஏப்ரல் 7ம் திகதி தமது குடியிருப்பிலேயே பாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |