தான் கொண்டு சென்ற ஒரு பொருளால் விமான நிலையத்தில் சிக்கலுக்குள்ளான இளம்பெண்: ஒரு எச்சரிக்கை செய்தி
வெளிநாடு செல்லும் தன் மகளை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தனியாக அழைத்துச் சென்றதைக் கண்ட தாய் அதிர்ச்சியடைந்தார்.
வெடிமருந்து இருப்பதாக சந்தேகம்
இஸ்தான்புல் செல்லும் தன் மகளை விமான நிலையத்தில் வழி அனுப்ப வந்தார் Zoe Hoyle என்ற பெண்.
அப்போது அந்த இளம்பெண்ணை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தனியாக அழைத்துச் சென்றதைக் கண்ட தாய் குழப்பமடைந்தார். 30 நிமிடங்களுக்கு அந்த இளம்பெண்ணையும் அவரது உடைமைகளையும் அதிகாரிகள் முழுமையாக சோதனையிட்டார்கள்.
பிறகுதான் Zoe Hoyleக்கு உண்மை தெரியவந்துள்ளது. அவரது மகள் கொண்டு சென்ற சூட்கேசை ஸ்கேனர் வழியாக அனுப்பும்போது, அதில் வெடிமருந்து துகள்கள் இருப்பதை அந்த இயந்திரம் காட்டியுள்ளது. ஆகவேதான் அவரை தீவிரமாக சோதனையிட்டுள்ளனர் அதிகாரிகள்.
பிரச்சினைக்கு என்ன காரணம்
பணத்தை மிச்சம் பிடிப்பதாக நினைத்துக்கொண்டு அந்த இளம்பெண் பழைய சூட்கேஸ் ஒன்றை குறைந்த விலைக்கு (secondhand) வாங்கியிருக்கிறார்.
அந்த சூட்கேஸ் ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய கடை ஒன்றில் வாங்கப்பட்டுள்ளது. அந்த சூட்கேசின் முதல் உரிமையாளர் அதை ஏதோ வெடிமருந்துகளை அல்லது பட்டாசுகளை கொண்டு செல்ல பயன்படுத்தியிருக்கலாம்.
Credit: Getty
ஆனால், விமான நிலைய ஸ்கேனரோ, அந்த சூட்கேசில் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் ரசாயனங்கள் இருப்பதாகக் காட்ட, அந்த இளம்பெண்ணுக்கு சிக்கல் ஆகிவிட்டது.
அவரை முழுமையாக சோதனை செய்தபிறகு, தவறுக்கு அவர் காரணம் இல்லை என தெரியவந்ததும் அவரை இஸ்தான்புல்லுக்கு பயணிக்க அதிகாரிகள் அனுமதித்துள்ளார்கள்.
ஆனாலும், தன் மகளை அதிகாரிகள் அரை அணி நேரமாக சோதனையிடுவதை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த Zoe Hoyle, பயணம் செய்வோர் தயவு செய்து பணத்தை மிச்சம் பிடிப்பதாக நினைத்துக்கொண்டு பழைய சூட்கேஸ் போன்ற பொருட்களை வாங்காதீர்கள் என எச்சரிக்கிறார்.
Credit: TikTok/@zoeehoyle