26 வயதில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் அனுபவித்த நரக வேதனை! உருக்கமுடன் கணவன் சொன்ன வார்த்தை
மேற்கு ஆப்பிரிக்காவில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை படைத்த நிலையில், அதன் போது அந்த பெண் அனுபவித்த நரக வேதனைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்கா நாடான மாலியைச் சேர்ந்த Halma Cisse(26), இவர் கர்ப்பம் காரணமாக மொராக்கோவில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் ஐந்து வாரங்கள் அனுமதிக்கப்பட்டார்.
ஏனெனில், பிரசவிப்பதற்கு முன்பு, அவரின் பிறக்காத நன்யூப்லெட்டுகள்(Nonuplets) மற்றும் அம்னோடிக்( Amniotic ) எடை 38 கிலோவாக இருந்ததால், அவர் கடும் சிரமத்திற்குள்ளானார்.
இதையடுத்தே அவர் மொராக்கோவில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு சென்றார். இதையடுத்து அவருக்கு பிரசவம் நெருங்கிய போது, கருப்பை மற்றும் தமனியில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால், Halma Cisse-ஐ காப்பாற்ற மருத்துவர்கள் போராடினர்.
சுமார் 18 செவிலியர்கள் கொண்ட குழு, குழந்தைகள் மற்றும் Halma Cisse-ஐ காப்பாற்ற போராடினர். இதற்கிடையில் Halma Cisse-க்கு அதிகமான இரத்த இழப்பு ஏற்பட்டதால், கிட்டத்தட்ட அவர் இறப்பை நோக்கியே சென்றுவிட்டார்.
அதன் பின் மருத்துவர்களின் தீவிர சிகிச்சை மூலம், பிறந்த 9 குழந்தைகளும், அங்கிருக்கும் இன்குபேட்டரில் வைக்கப்பட்டு, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கர்ப்பமாக இருந்த ஏழு மாதங்களுக்கு பின்னர், Halma Cisse தன் வயிற்றில் இருக்கும் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக, மருத்துவ பராமரிப்பிற்காக மொராக்கோ சென்றுவிட்டார்.
அதன் காரணமாகவே அவருடைய நன்யூப்லெட்டுகளை ஆராய்ந்து பார்த்த மருத்துவர்கள் அதற்கு தகுந்த சிகிச்சை அளித்து, இப்போது காப்பாற்றியுள்ளனர்.
இது குறித்து Halma Cisse கூறுகையில், இது கடவுளிடம் இருந்து எனக்கு கிடைத்த பரிசு என்றே கூறுவேன். நான் என் மனைவியுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்.
என்னுடைய இரண்டரை வயது மகளை கவனித்து கொள்ள வேண்டும் என்பதால், நான் இப்போது மாலியில் இருக்கிறேன். கொரோனா சூழ்நிலை காரணமாக, அங்கு செல்வது என்பது மிகவும் கடினம். இருப்பினும் அடுத்த வாரம் அங்கு செல்ல முயற்சி செய்து வருகிறேன்.
இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்த தம்பதி கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இப்போது பிறந்துள்ள, ஐந்து பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகளுக்கு பெயர்கள் கூட தெரிவு செய்துவிட்டதாக, அவர் கூறினார் .
ஆரம்பத்தில், Halma Cisse ஏழு குழந்தைகளை சுமந்து கொண்டிருப்பதாக மருத்துவர்கள் நினைத்தனர். இதையடுத்தே அவர் சிறப்பு சிகிச்சை தேவை என்ற காரணத்தினால், நாட்டின் ஜனாதிபதி அதற்கான அனுமதி அளித்து, மொரோக்கா செல்ல உத்தரவிட்டார்.